Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் சங்கம் தேர்தல்.. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது... விஷால் பரபர!
சென்னை: நீதியின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. குளறுபடிகள் காரணமாக 23ஆம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பின் பாண்டவர் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே என தெரிவித்தது.
நம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபர டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எப்போதும்போல நீதித்துறையும் சட்டமும் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் என பதிவிட்டுள்ளார் விஷால்.