Don't Miss!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரே நாளில் பல இடங்களில் சோதனை.. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தயாரிப்பாளரும் பைனான்சியருமானவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மருது, ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்காரத் துரை, தங்க மகன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
பல தயாரிப்பாளரின் படங்களுக்கு பைனான்ஸும் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் 20 இடங்களில் அதிரடி!
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார், கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதுதொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியன் தேடப்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி அப்போது அவர் மீது ஏராளமான கந்துவட்டி புகார்களும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நபராக கருதப்படும் அன்புச்செழியன் வீட்லும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.