Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரே நாளில் பல இடங்களில் சோதனை.. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தயாரிப்பாளரும் பைனான்சியருமானவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மருது, ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்காரத் துரை, தங்க மகன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
பல தயாரிப்பாளரின் படங்களுக்கு பைனான்ஸும் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் 20 இடங்களில் அதிரடி!
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார், கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதுதொடர்பாக பைனான்சியர் அன்புச்செழியன் தேடப்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி அப்போது அவர் மீது ஏராளமான கந்துவட்டி புகார்களும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நபராக கருதப்படும் அன்புச்செழியன் வீட்லும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.