Don't Miss!
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை
கொல்கத்தா: அனுமதி இல்லாமல் தோளில் கையை போட்ட ரசிகர் மீது நடிகை வித்யா பாலன் கோபப்பட்டார்.
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் வித்யா பாலன். அவர் தற்போது பேகம் ஜான் படத்தில் விபச்சார தொழில் நடத்தும் இடத்தின் தலைவியாக நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் வித்யாவின் நடிப்பை புகழ்ந்துள்ளனர்.
கொல்கத்தா
வித்யா மற்றும் பேகம் ஜான் படத்தின் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, தயாரிப்பாளர் ஆகியோர் பட வேலை காரணமாக கொல்கத்தா சென்றுள்ளனர். அவர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றுள்ளனர்.
செல்ஃபி
வித்யாவை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க விரும்ப அவரும் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அந்த ரசிகரோ வித்யாவுக்கு மிக அருகில் வந்து நின்றதோடு அனுமதியில்லாமல் அவர் தோளில் கையை போட்டார்.
கோபம்
அனுமதியில்லாமல் தொடுவது சரியில்லை என்று வித்யா அந்த ரசிகரிடம் கூறியுள்ளார். உடனே அந்த ரசிகர் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் வித்யாவை தொட்டுள்ளார்.
வித்யா
சொல்லியும் வேண்டும் என்றே தன்னை தொட்டதால் வித்யா கோபம் அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார். நாங்கள் பிரபலங்கள் தான் ஆனால் பொது சொத்து அல்ல என்று வித்யா தெரிவித்துள்ளார்.