நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் நெட்டிசன்ஸ்: யார் அவர் தெரியுமா?
Recommended Video
சென்னை: கான்டிராக்டர் நேசமணி இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.
வெளிநாட்டு பெண் ஒருவர் சுத்தியல் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இதை உங்கள் மொழியில் எப்படி சொல்வீர்கள் என்று கேட்டார். அதை பார்த்த தமிழர் ஒருவர் சுத்தியல் என்று கூறியதுடன் ப்ரெண்ட்ஸ் படத்தில் நேசமணி தலையில் சுத்தியல் விழும் வீடியோவையும் போஸ்ட் செய்தார்.
அதன் பிறகு இந்திய அளவில் நேசமணி பற்றி பேசத் துவங்கிவிட்டனர்.
டிரெண்ட்
நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததால் #prayfornesamani என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது. நம் தமிழ் ரசிகர்கள் ஏகத்திற்கும் மீம்ஸ் போட்டுத் தாக்கியுள்ளனர்.
வடிவேலு
ஒரே இரவில் வடிவேலு உலக அளவில் பேசப்பட்டுள்ளார். எப்பொழுதோ அவர் தலையில் சுத்தியல் விழுந்ததற்கு தற்போது அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
மண் சோறு
நேசமணி குணமடைய மண் சோறு சாப்பிடுவதுடன் மக்கள் பிரார்த்தனையும் செய்கிறார்களாம்.
தலைக்கவசம்
வேலை செய்யும்போது தலைக்கவசம் முக்கியம். மேலும் ஒரு நேசமணியை இழக்கத் தயாராக இல்லையாம்.


Click it and Unblock the Notifications











