Don't Miss!
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிரஞ்சீவி மீது முட்டை வீசிய டிஆர்எஸ்!
ஆந்திர மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தனது கட்சியைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் உள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கானா பகுதியில் தற்போது சிரஞ்சீவி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று வாரங்கல் மாவட்டம் நரசம்பேட்டையில் அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் திடீரென கூட்டத்திலிருந்த சிலர் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவியை நோக்கி அழுகிய முட்டைகளை வீசினர். அதில் ஒரு முட்டை நேராக சிரஞ்சீவியின் முகத்தை தாக்கியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கட்சி நிர்வாகிகள் சிரஞ்சீவியை சூழ்ந்து கொண்டு நின்றனர். பின்னர் வீசப்பட்ட முட்டைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்கள் மீது விழுந்தன.
இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து முட்டைகளை வீசிய ஆசாமிகளை கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உடனடியாக கூட்டத்தினரை நோக்கி பேசிய சிரஞ்சீவி, 'என் மீது வீசப்படும் மலர் செண்டுகளையும், அழுகிய முட்டைகளையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன். இதனால் நான் தளர்ந்துவிட மாட்டேன். எனது பயணம் தொடரும். கோடிக் கணக்கான மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், அவர்களுக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயார், என்றார்.
இதற்கிடையில் போலீசில் ஒப்படைக்கப்பட்ட ஆசாமிகள் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.