Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மேலே நிழல் தெரிந்தது.. வெளியே ஓடினேன்.. சப்பையான இருக்கை.. இந்தியன் 2 விபத்தை விளக்கிய கமல்!
இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார்.
நேற்று முதல் நாள் இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
என்ன சொன்னார்
இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார். அதன்படி, சரியாக இந்த விபத்து நடந்த போது கமல் விபத்து நடந்த பகுதியில்தான் இருந்திருக்கிறார். அப்போது சரியாக கிரேன் ஆடும் சத்தம் கேட்டு இருக்கிறார். வெளியே இருந்த பலரும் கத்தி இருக்கிறார்கள்.
கமல் எப்படி
இதையடுத்து கமல் இருந்த கூடத்தின் மேல் பெரிய நிழல் தெரிந்துள்ளது. அவர் இருந்த கூடாரத்தை நோக்கித்தான் வேகமாக கிரேன் சரிந்துள்ளது. இந்த கூடாரத்தை பார்த்ததும் அங்கிருந்து கமல் வேகமாக வெளியே வந்து இருக்கிறார். கமலுடன் அப்போது அங்கே காஜல் அகர்வால் இருந்துள்ளார். அவரும் கூட அங்கிருந்து அப்படியே எகிறி குதித்து வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்த பின்னர்
வெளியே வந்த பின்தான தெரிந்து உள்ளது, மிகப்பெரிய கிரேன் ஒன்று கீழே விழுந்தது.மொத்தமாக வேகமாக கிரேன் சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்துக்கு பின் கிரேன் விழுந்த பகுதிக்கு சென்று கமல்ஹாசன் பார்த்து இருக்கிறார். அந்த பகுதியில் அவர் இருந்த இருக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது. அவர் இருக்கையே மொத்தமாக சப்பையாகி உள்ளது.
கூடாரம் என்ன
இந்த கூடாரத்தில்தான் பலியான மூன்று பேரும் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்த காட்சிக்காக உள்ளே இருந்து சீன் எழுதிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் மீது கிரேன் மொத்தமாக விழுந்து நொறுங்கி இருக்கிறது. இந்த விபத்து தனக்கு பெரிய மனஉளைச்சலை தந்ததாக அவர் படக்குழுவிடம் பேசி இருக்கிறார்.