Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியன் 2: ஒரு வழியாக லைகா, ஷங்கர் இடையேயான பிரச்சனை தீர்ந்தது
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படம் தொடர்பான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாம்.
இந்தியன் 2 படம் துவங்கியதில் இருந்தே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் கமலின் கெட்டப் பிடிக்காமல் ஷங்கர் ஷூட்டிங்கை நிறுத்தினார்.
அதன் பிறகு தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பதால் அது முடிந்த பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்.
மாஸ், மரண மாஸ், மிரள வைக்கும் 'மிஸ்டர் குளோபல்'
இதற்கிடையே பட்ஜெட்டை எகிறவிடுகிறார் ஷங்கர் என்று கூறி லைகா நிறுவனம் பிரச்சனை செய்வதாக செய்திகள் வெளியாகின. லைகா வெளியேறினால் வேறு யாரையாவது தயாரிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் ஷங்கர் இருந்தார் என்று கூறப்பட்டது.
இல்லை, இல்லை அப்படி எந்த பிரச்சனையும் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தனர். விளக்கம் அளித்த வேகத்தில் மீண்டும் பிரச்சனை என்ற பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் ஷங்கர், லைகா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாங்களே படத்தை தயாரிக்கிறோம் என்று லைகா வாக்குறுதி அளித்துள்ளதாம்.
வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இதையடுத்து ஜூன் மாதம் படப்பிடிப்பை மீண்டும் துவங்கப் போகிறார்களாம்.