Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
இந்தியன் 2 விவகாரம்.. லைகா நிறுவனத்திடம் இயக்குநர் ஷங்கர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி!
சென்னை: லைகா நிறுவனத்திடம் இயக்குநர் ஷங்கர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
என்ன சொல்றீங்க...கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியின் தங்கையா ?
2019ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
கிரேன் சரிந்து விபத்து
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
அந்நியன் இந்தி ரீமேக்
இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார்.
தடை விதிக்க வேண்டும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஹைகோர்ட் மறுப்பு
மேலும் இவ்வளவு செலவு செய்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தரது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.
அக்டோபருக்குள் முடிக்க முயற்சி
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.
நீதிபதிகள் அறிவுறுத்தல்
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்ற தலையீட்டால் இந்தியன் 2 படப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. லைகா நிறுவனமும் ஷங்கரும் கலந்து பேசி படப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என அறிவுறுத்தினர்.
லைகாவிடம் பேச்சு வார்த்தை
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சு வார்த்தை தோல்வி
இரண்டரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதைத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது எனத் தெரிவித்தார்.
Recommended Video
வழக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து, நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர். நடிகர் விவேக் நடித்த காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட வேண்டி உள்ளதாக நடிகர் ஷங்கர் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.