Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டோலிவுட் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்த தயாரிப்பாளர்
சிகாகோ: இந்தியாவை சேர்ந்த தம்பதி தெலுங்கு திரையுலக நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த கிஷன் மொதுகுமுடி என்கிற ராஜு என்கிற ஸ்ரீராஜ் சொன்னுப்பட்டி(34) அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி சந்திரா(31). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொழில் அதிபரான கிஷன் பல ஹிட்டான தெலுங்கு படங்களையும் தயாரித்துள்ளார்.
நடிகைகள்
அமெரிக்காவில் நடக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதாகக் கூறி தெலுங்கு திரையுலகில் போராடிக் கொண்டிருக்கும் நடிககைளை வரவழைத்து அவர்களை வைத்து விபச்சார தொழில் செய்துள்ளார் கிஷன்.
ரூ. 2 லட்சம்
அமெரிக்கா அழைத்து வரப்பட்ட நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் என்று அமெரிக்காவில் விளம்பரம் செய்துள்ளார் கிஷன். அந்த நடிகைகளுடன் உறவு கொள்ள வாடிக்கையாளர்களிடம் தலா ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார்.
சந்திரா
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை ஒரு சின்ன அபார்ட்மென்ட்டில் அடைத்து வைத்திருந்திருக்கிறார் கிஷன். நடிகைகள் யார், யாருடன் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் உள்ளிட்ட பல கேவலமான விபரங்களை கிஷனின் மனைவி நோட் போட்டு எழுதி வைத்திருக்கிறார். அந்த நோட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜாமீன்
சந்திரா, கிஷன் செய்து வந்த தொழில் குறித்து அறிந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீனும் கிடைக்க முடியாதபடி செய்துவிட்டனர். அவர்களின் குழந்தைகள் வெர்ஜினியாவில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.