Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? விருது விழாவில் ராஜாமௌலி சொன்ன ரகசியம்
சென்னை: கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் என்ற கேள்விக்கு, 2017 ஏப்ரலில் தெரிந்து விடும் என்று படத்தின் இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.
சி என் என் நியூஸ் 18 சார்பில் பொழுதுபோக்கு துறையின் 2015 ம் ஆண்டின் சிறந்த இந்தியன் விருது எஸ். எஸ். ராஜ மௌலிக்கு வழங்கப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டு சிரித்த ராஜமௌலி, 2017 ஏப்ரலில் இதற்கு விடை தெரிந்து விடும் என்றார். அத்தோடு , வரும் மாதம் சீனாவில் பாகுபலி படத்தை திரையிடப்போவதாகவும் தெரிவித்தார்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் பெறும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் இறுதியில் கட்டப்பா பாகுபலியை கொல்வதாக காட்டியிருப்பார்கள். அது ஒரு அதிர்ச்சி முடிவாக இருந்தது. என்ன நடந்திருக்கும் என்ன நடந்திருக்கும் ? என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாகவே கட்டப்பா, பாகுபலி பற்றிய கேள்விகளையும், சஸ்பென்ஸ் பற்றிய கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.
பொழுது போக்கு துறை பிரிவில் இந்தியன் ஆஃப் த இயர் விருது சஞ்சய் லீலாபன்சாலி, ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.