Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
‘பஞ்சாப்பின் வைரங்கள்’ என இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு புகழாரம்- காம் தே ஹீரே படத்திற்கு எதிர்ப்பு
சண்டிகர்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கொலையாளிகளை 'பஞ்சாபின் வைரங்கள்' என்று ஒரு படத்தில் வர்ணித்திருப்பது எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
இந்திரா காந்தி
கொலையாளிகளான சத்வத் சிங், பியாந்த் சிங் ஆகியோரை புகழ்ந்தும், அவர்களை பஞ்சாபின் வைரங்கள் என்று வர்ணித்தும், பஞ்சாபி மொழிப் படம் ஒன்றில் காட்சிகள் வைத்துள்ளனர். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தப் படம்
வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஆனால் இப்படத்தை திரையிடக் கூடாது. தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எச்சரிக்கை...
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் படம் திரையிட அனுமதிக்கப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு...
இதேபோல ஆளும் அகாலிதளத்திற்கும் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்தரவு...
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கவனிக்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மாநில உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திரா காந்தி படுகொலை...
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது மெய்க்காப்பாளர்களான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரால் மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படுகொலை நடந்தது.
காம் தே ஹீரே...
இந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு காம் தே ஹீரே என்ற பெயரில் பஞ்சாபியில் ஒரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கு ஆங்கிலத்தில் சமூகத்தின் வைரங்கள் என்று பொருள் படும்.