Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைப் பொருள் வழக்கில் நடிகை தீபிகாவா? ஜீரணிக்க முடியல.. அதிர்ச்சியில் அறிமுகப்படுத்திய இயக்குனர்!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை அடுத்து அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போதைப் பொருள் வழக்கு பாலிவுட்டிலும் கன்னட சினிமாதுறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த விவகாரத்தில் புது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அப்படியா.. எனக்கு சம்மன் எதுவுமே வரலையே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிரடியாக மறுப்பு.. என்ன ஆச்சு?
ராகிணி திவிவேதி
இந்த வழக்கில் முதலில் கன்னட நடிகைகள் ராகிணி திவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆண்ட்ரிதா ராய், திகாந்த் உள்பட பல திரையுலகினர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதே போல பாலிவுட்டில் நடிகை ரியா சக்கரவரத்தி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகுல் பிரீத் சிங்
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திரஜித் லங்கேஷ்
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனை 2006 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இந்திரஜித் லங்கேஷ். இவர் போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகள் பெயர்கள் அடங்கிய லிஸ்ட்டை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்தவர். அதன் அடிப்படையில் அங்கு விசாரணை தொடங்கியது.
தீபிகா படுகோன்
இந்த வழக்கில் தீபிகா படுகோனுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, இந்திரஜித் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவரை முதல் படத்தில் இருந்து நெருக்கமாக அறிந்தவன் நான். அவர் பற்றிய செய்தியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது.
குற்றம் செய்திருந்தால்
அவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இருந்தார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பாலிவுட்டில் மன அழுத்தம், சக நண்பர்களின் பாதிப்பு மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். அதற்காக நான் அவரை பாதுகாக்க முயற்சிக்கவில்லை. அவர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அது தவறு.
நல்லதை தராது
தீபிகாவின் தந்தை ஒழுக்கத்தைப் பின்பற்றியவர். ஒருவர் தனது வேர்களை அறிந்திருந்தால், பெற்றோர் சந்தித்த சிரமங்களை புரிந்துகொண்டால், அது உங்களை காப்பாற்றி வளர்க்கும். நண்பர்களோ, போதை மருந்துகளோ நல்லதை தராது. இவ்வாறு இந்திரஜித் லங்கேஷ் கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!