Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்!
Recommended Video
சென்னை: இன்று நேற்று நாளை திரைப்படத்தின் அடுத்த பாகம் துவங்க உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சமீப காலங்களில் பெட்ரோல் விலை ஏற்றத்தை குறிப்பிட பயன்படுத்தபடும் மீம் "சமூகம் பெரிய இடம் போலருக்கு" என்பது தான். அந்த டயலாக் இடம்பெற்ற திரைப்படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ரவி சங்கர் மற்றும் பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
டைம் ட்ராவல் படமான இன்று நேற்று நாளை மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியிருந்தது. டைம் மெஷினில் கடந்த காலத்திற்க்கு போவது, மியா குழந்தையாக பிறப்பதை அவரே பார்ப்பது, விஷ்ணு கடந்த காலத்திற்குச் சென்று நகை வாங்கப்போகும் போது நடக்கும் குழப்பம் போன்ற காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை.
ஹாலிவுட்டில் டைம் ட்ராவல் படமெல்லாம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆர்ப்பாட்டமில்லாமல், ரசிக்கும்படியாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் திரைக்கதையை கையாண்டிருந்தார் ரவிக்குமார்.
On this auspicious day we are excited to announce the sequel of #Indru-nettru-naalai . Details soon pic.twitter.com/K2XOhtfxoH
— Thirukumaran Ent., (@ThirukumaranEnt) October 19, 2018
தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.
முதல் பாகம் வெற்றிபெற்றதால் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் எனத் தெரிகிறது. ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ராட்சசன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் அல்லது ஆர்யா நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.