Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கரையோரம்... சிம்ரனை அடித்த இனியா!
கரையோரம் படத்தின் க்ளைமாக்ஸில் சிம்ரனை அடிப்பது போன்ற சண்டைக் காட்சியில் மிகவும் தயங்கியதாக இனியா தெரிவித்தார்.
சிம்ரன், இனியா, நிகிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கரையோரம்'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இனியா, நிகிஷா, படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இப்படம் குறித்து இயக்குநர் ஜெகேஎஸ் கூறுகையில், "கரையோரம்' படம் பேய் படம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இது பேய் படம் அல்ல. இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திரில் இருக்கும்.
இந்த கரையோரம் சிம்ரன் அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. வருகிற 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
இனியா கூறுகையில், "இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். கிளைமாக்ஸில் என்னுடைய கதாபாத்திரம் திருப்பு முனையாக இருக்கும்.
சீனியர் நடிகர் சிம்ரனுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. கிளைமாக்ஸில் எனக்கும் சிம்ரனுக்கும் சண்டைக் காட்சி இருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் சிம்ரனை அடிக்க மிகவும் தயங்கினேன். ஆனால், சிம்ரன் என் தயக்கத்தைப் போக்கி நடிக்க வைத்தார்," என்றார்.