நான் ஐஸ்வர்யா ராய், எனக்கே இப்படியா?: கொந்தளித்த ஐஸ்
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது குழுவினரிடம் கோபப்பட்டாராம்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.
முதல் புகைப்படமாக மகள் ஆராத்யா கைக்குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

ஆமீர்
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியபோது தனது தாயின் புகைப்படத்தை கொலாஜ் வடிவில் வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் அதே போன்று தான் புகைப்படத்தை வெளியிட்டார். ஐஸ் ஆமீர் கானை காப்பியடித்ததாக பேச்சு கிளம்பியது.

ஐஸ்வர்யா
தான் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி 6 மணிநேரம் கழித்தும் 20 ஆயிரம் ஃபாலோயர்கள் கூட வராதது ஐஸ்வர்யா ராயை அதிருப்தி அடைய வைத்ததாம். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று தனது குழுவை திட்டினாராம் ஐஸ்வர்யா.

டிக்
இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏன் நீல நிற டிக் இல்லை. இது என் கணக்கு தான் என ரசிகர்கள் எப்படி நம்புவார்கள். யாரோ போலி கணக்கு துவங்கியிருப்பதாக சந்தேகப்பட மாட்டார்களா என்று ஐஸ்வர்யா ராய் பொறிந்து தள்ளிவிட்டாராம்.

அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த அவரின் கணவர் அபிஷேக் பச்சன் கமெண்ட் போட்ட பிறகே இது உண்மையான கணக்கு தான் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கிருந்து அவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











