Don't Miss!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"ஐயா"வுக்கு பஸ்ல வந்தார்.. இப்ப "சிவனோடு" தனி பிளைட்.. என்னா வளர்ச்சிம்மா நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா தனது முதல் படத்திற்காக கேரளாவில் இருந்து எப்படி வந்தார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள படங்களில் நடித்த நயன்தாரா, தமிழில் சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடனுடம் இணைந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
யூ தமிழன்ஸ்.. இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறனை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்திய அதிகாரி!
விக்கியுடன் ஓணம்
அண்மையில் நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அவரது போட்டோக்களால் #Nayanthara என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.
சென்னை வந்தது எப்படி?
ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சொந்த ஊரான கொச்சி சென்றார். இந்நிலையில் நயன்தாரா தமிழில் தனது முதல் படத்தில் நடிக்கும் போது எப்படி கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பேருந்தில்
அதாவது ஐயா படத்தில் நடிப்பதற்காக தனது அப்பாவை அழைத்துக் கொண்டு அரசு பேருந்தில் வந்தாராம் நடிகை நயன்தாரா. பேருந்தில் கோயம்பேடு வந்து இறங்கிய அவரை பீஆர்ஓ ஜான்சன் ரிசீவ் செய்துள்ளார்.
யூ டியூபர் தகவல்
மேலும் வட பழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் நயன்தாராவையும் அவரது அப்பாவையும் தங்க வைத்தாராம். இந்த தகவலை யூ டியூபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பு
முதல் படத்திற்கு அரசுப் பேருந்தில் வந்த நடிகை நயன்தாரா இன்று தனி விமானம் மூலம் பயணிக்கிறார் என்றால், அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும் அவரது திறமையும் தான் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.
பல படிகள்
காதல் தோல்வி, செகன்ட் ஹீரோயின், எடுப்படாத கேரக்டர்கள் என பல படிகளை விடாமுயற்சியுடன் தாண்டி வந்துள்ளார் நயன்தாரா. தனக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.
முன்னோடி
சினிமா அல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து இன்று உச்ச நடிகையாக உயர்ந்துள்ள நயன்தாரா, தமிழ் சினிமாவில் நெபோட்டிசம் உள்ளது, திறமைக்கு மதிப்பில்லை என்று கூறும் நடிகைகளுக்கு முன்னுதாரணமாகவும், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் நடிகைகளுக்கு முன்னோடியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.