Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ராஜேஷ் கன்னாவின் உயிலை அவரது பெண் 'பார்ட்னரிடம்' ஒப்படைக்க தடை!
மும்பை: மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணாவின் சொத்துகள் பற்றிய உயிலை அவரது பெண் பார்ட்னரிடம் ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவின் முதல் மனைவி நடிகை டிம்பிள் கபாடியா. இருவருக்கும் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா என இரு மகள்கள் உள்ளனர்.
டிம்பிள் கபாடியாவை ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டார் ராஜேஷ் கன்னா. பிறகு தனது கடைசி காலம் வரை அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே, ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
அதே நேரம், டிம்பிள் கபாடியாவுடனும் சுமூகமாகிவிட்டார்.
மும்பையில் ராஜேஷ் கன்னாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் ராஜேஷ்கன்னா வசித்த மும்பை கடற்கரையில் உள்ள ஆசீர்வாத் பங்களா ரூ.90 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பணம் ராஜேஷ் கன்னாவின் வாரிசுகளான ரிங்கி கன்னா, டுவிங்கில் கன்னாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அதை விலைக்கு வாங்கிய தொழில் அதிபர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இறப்பதற்கு முன் ராஜேஷ்கன்னா உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயில் மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
உயிலின் நகலை தன்னிடம் ஒப்படைக்க கோரி ராஜேஷ் கன்னாவின் பெண் பார்ட்னர் அனிதா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், 'நான் ராஜேஷ் கன்னாவின் வாழ்க்கை துணைவியாக அவரது இறுதி காலம் வரை வாழ்ந்தேன். எனவே உயிலின் நகலை கேட்க உரிமை இருக்கிறது' என்று கூறி இருந்தார்.
இதற்கு ட்விங்கிள் கன்னா எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ராஜேஷ் கன்னாவின் வாரிசு அனிதா அல்ல. அவரிடம் உயிலை ஒப்படைக்கவும் கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மனுவை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா விசாரித்து, அனிதாவிடம் ராஜேஷ் கன்னாவின் உயில் நகல் வழங்க இடைக்கால தடை விதித்தார்.
வழக்கு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேநேரம் வரும் 4-ம் தேதி திங்கள் கிழமை வரை அந்த உயிலை தருமாறு கேட்கப் போவதில்லை என்று அனிதா தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளனர்.
இதற்கிடையே ராஜேஷ் கன்னா உயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ட்விங்கிள் கன்னா மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார்.