twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜேஷ் கன்னாவின் உயிலை அவரது பெண் 'பார்ட்னரிடம்' ஒப்படைக்க தடை!

    By Shankar
    |

    மும்பை: மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணாவின் சொத்துகள் பற்றிய உயிலை அவரது பெண் பார்ட்னரிடம் ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவின் முதல் மனைவி நடிகை டிம்பிள் கபாடியா. இருவருக்கும் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா என இரு மகள்கள் உள்ளனர்.

    Interim ban to hand over Rajesh Khanna's will to his 'live-in partner'!

    டிம்பிள் கபாடியாவை ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டார் ராஜேஷ் கன்னா. பிறகு தனது கடைசி காலம் வரை அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே, ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

    அதே நேரம், டிம்பிள் கபாடியாவுடனும் சுமூகமாகிவிட்டார்.

    மும்பையில் ராஜேஷ் கன்னாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் ராஜேஷ்கன்னா வசித்த மும்பை கடற்கரையில் உள்ள ஆசீர்வாத் பங்களா ரூ.90 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பணம் ராஜேஷ் கன்னாவின் வாரிசுகளான ரிங்கி கன்னா, டுவிங்கில் கன்னாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அதை விலைக்கு வாங்கிய தொழில் அதிபர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே இறப்பதற்கு முன் ராஜேஷ்கன்னா உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயில் மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    உயிலின் நகலை தன்னிடம் ஒப்படைக்க கோரி ராஜேஷ் கன்னாவின் பெண் பார்ட்னர் அனிதா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    அதில், 'நான் ராஜேஷ் கன்னாவின் வாழ்க்கை துணைவியாக அவரது இறுதி காலம் வரை வாழ்ந்தேன். எனவே உயிலின் நகலை கேட்க உரிமை இருக்கிறது' என்று கூறி இருந்தார்.

    இதற்கு ட்விங்கிள் கன்னா எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ராஜேஷ் கன்னாவின் வாரிசு அனிதா அல்ல. அவரிடம் உயிலை ஒப்படைக்கவும் கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    மனுவை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா விசாரித்து, அனிதாவிடம் ராஜேஷ் கன்னாவின் உயில் நகல் வழங்க இடைக்கால தடை விதித்தார்.

    வழக்கு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேநேரம் வரும் 4-ம் தேதி திங்கள் கிழமை வரை அந்த உயிலை தருமாறு கேட்கப் போவதில்லை என்று அனிதா தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளனர்.

    இதற்கிடையே ராஜேஷ் கன்னா உயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ட்விங்கிள் கன்னா மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    English summary
    The Mumbai High Court has ordered an interim ban to hand over the will documents of late Rajesh Khanna to his live in partner Anitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X