Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!
சென்னை: கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விமல், விதார்த், பூர்ணா நடித்த ஜன்னல் ஓரம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை கருபழனியப்பன் இயக்கி இருந்தார். கே.முருகன் தயாரித்து இருந்தார்.
இந்த படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் டி.டி.ராஜா, என். செந்தில்பிரபு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜன்னல் ஓரம் பட தயாரிப்பாளர் கே.முருகன் பட செலவுக்காக ரூ.93 லட்சம் கடன் வாங்கி இருந்தார் என்றும் படம் ரிலீசுக்கு முன் திருப்பி தருவதாக உறுதி அளித்துவிட்டு பணத்தை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டு விட்டார் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
பிரசாத் பிலிம் லேப்பில் உறுதிமொழி பத்திரம் பெற்று இருந்தோம். அதுவும் மீறப்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறினர்.
எனவே படத்தை டி.வி.யில் ஒளி பரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.