Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை!
சென்னை: கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விமல், விதார்த், பூர்ணா நடித்த ஜன்னல் ஓரம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை கருபழனியப்பன் இயக்கி இருந்தார். கே.முருகன் தயாரித்து இருந்தார்.
இந்த படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் டி.டி.ராஜா, என். செந்தில்பிரபு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜன்னல் ஓரம் பட தயாரிப்பாளர் கே.முருகன் பட செலவுக்காக ரூ.93 லட்சம் கடன் வாங்கி இருந்தார் என்றும் படம் ரிலீசுக்கு முன் திருப்பி தருவதாக உறுதி அளித்துவிட்டு பணத்தை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டு விட்டார் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
பிரசாத் பிலிம் லேப்பில் உறுதிமொழி பத்திரம் பெற்று இருந்தோம். அதுவும் மீறப்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறினர்.
எனவே படத்தை டி.வி.யில் ஒளி பரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜன்னல் ஓரம் படத்தை டிவியில் ஒளிபரப்ப இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.