Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' - தடை நீட்டிப்பு
சென்னை பெருநகர 8-வது உரிமையியல் நீதிமன்றத்தில் பைனான்சியர் எஸ். சிவகுமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், 'சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராசுமதுரவன் என்பவர், பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' என்ற தலைப்பில் தமிழ் சினிமா படம் தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்தை தயாரிக்க, என்னிடம் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, படம் ரிலீசாவதற்கு 30 நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி தந்து விடுவதாக ராசுமதுரவன் கூறினார். ஆனால் பணத்தை திருப்பித்தராமல், படத்தை 17-ந் தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளார். எனவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி, 'படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து' கடந்த 16-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி கலியமூர்த்தி, அதுவரை பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.