Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உதயநிதி படம் எப்படி உள்ளே வந்துச்சு..? - சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை!
சென்னை : 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14-ம் தேதி துவங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையிலுள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் கல்சுரல் சென்டர் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
என்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு கேட்டகிரிகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
இந்த திரைப்பட விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டன.
திரைப்பட விழா தொடங்கப்பட்ட பிறகு இந்தப்பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' படமும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. விழா துவங்கிய பின்னர் எந்த அடிப்படையில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தார்கள் என்று திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.