Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சி.வி.குமாருக்கு கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார்- ஞானவேல் ராஜா
சென்னை: தன்னை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.
இறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ்க்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் ''எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்தது.
சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.விகுமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்.
சொன்ன பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை கார்த்திக் எடுத்திருக்கிறார். கார்த்திக்கின் முந்தைய இயக்குநர் கதிரேசன் பட்டதை விட 2 மடங்கு கஷ்டத்தை இறைவியில் சி.வி.குமார் அனுபவித்திருக்கிறார்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.
அதே நேரம் இப்படத்தைத் தயாரிக்கும் போதே சி.வி.குமார், ஞானவேல் ராஜா இருவருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளரை அவமானப்படுத்தியது தெரியவில்லையா? என்று கார்த்திக் சுப்புராஜ்க்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.