Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘
சென்னை : இயற்கையை அதன் போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதை தான் 'இறலி'.
இறலி படத்தை ஜெய். விஜயகுமார் இயக்குகிறார். படத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் 'குயின்' படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் 'லூசிஃபர் 'என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர். குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது , நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது, "இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். மீறி செயற்கை வழிக்கு இழுத்தால், அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக 'இறலி' இருக்கும் என்றார்.
'இறலி' என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளைவு என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை" என்கிறார் .
படத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது, "இறலி'படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன்.
ரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.
அடி வயிற்றில் சிசு.. அப்படியும் அசராமல்.. அடிமுறை கற்று அசத்திய சினேகா!
Recommended Video
தானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது. இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது . பழமே விஷமானால் ? அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். உயிரை விடுகிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக 'இறலி' இருக்கும்.