Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!
Recommended Video
சென்னை : இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் படம் தான் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு . இப்படம் வரும் டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
படம் ரிலீஸாகும் தேதி நெருங்கி விட்டதால், படத்தின் விளம்பர வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. தினமும் ஒரு வசனம், தினமும் ஒரு போஸ்டர் இணையதளத்தில் கலக்கி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
'உயிர் வாழ உழைப்பு உண்டு அந்த உயிருக்கு உத்தரவாதமில்லாத உழைப்பு தான் எங்களுக்கு உண்டு' என்று தற்போது வெளிவந்துள்ள போஸ்டர், உழைக்கும் மக்களின் வலிகளை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தின் கதை இரும்பு கடையில் வேலை செய்பவர்களையும், ஓட்டுனர்கள் வாழ்க்கையின் வலிகளை சொல்லும் கதையாக உருவாக்கபட்டிருக்கிறது . இந்த படத்தை அறிமுக இயக்குனரான அதியன் ஆதிர் ஆரம்ப கால கட்டத்தில் இரும்புகடையில் வேலை பார்த்து வந்ததாக இசை வெளியீட்டின் போது கூறி இருந்தார். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்கையை தான் இரும்பு கடையில் வேலை பார்த்தபோது வாழ்ந்து வந்ததாக கூறியிருந்தார். அதன் தாக்கமே இந்த படம் உருவாக காரணம் என்று கூறியிருந்தார்.
"அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்".. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்
பல நல்ல கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு தலம் செயல் பட்டு வருவதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறியிருந்தார் .இயக்குனர் இரஞ்சித் தனது வாழ்வில் பல இன்னல்களை பார்த்து அதை மக்களுக்கு படமாக மாற்ற முயற்சிக்கும் மனிதர்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்க்கையையும் வழங்கி வருகிறார் .மேலும் இரஞ்சித் சினிமாவில் சாதிக்க முயலும் பலருக்கு உதவி வருகிறார் ,அதற்காக குக்கூ என்ற நூலகத்தையும் சென்னையில் துவங்கி இருக்கிறார்.