Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் திரைப்படம் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
மிகப் பெரிய பட்ஜெட்டில், ஒரு கற்பனை உலகத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்ட படம் 'இரண்டாம் உலகம்'.
தீபாவளிக்கே வர வேண்டிய படம். தியேட்டர்கள் சரிவர கிடைக்காததால் இந்தப் படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தார்கள். இப்போது திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக 'ஆரம்பம்', 'பாண்டிய நாடு' படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது. மேலும் நல்ல அரங்குகளில் வெளியானால்தான் இந்தப் படத்தை ரசிக்க முடியும்.
இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இப்படம் 'வர்ணா' என்ற பெயரில் வெளியாகிறது.
ரசிகர்களுக்கு வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தைத் தர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தை உருவாக்கியதன் நோக்கம் என்று இயக்குநர் செல்வராகவன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.