1200 அரங்குகளில்... வெளியாகுமா இரண்டாம் உலகம்?
சென்னை: செல்வராகவனின் இரண்டாம் உலகம் படம் தமிழ், தெலுங்கில் 1200 தியேட்டர்களில் நாளை மறுநாள் ரிலீசாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் தரப்பட்டுள்ளதால், படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழில் இரண்டாம் உலகம் என்ற தலைப்பிலும், தெலுங்கில் வர்ணா என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகிறது.
இரு மொழிகளிலும் மொத்தம் 1200 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
ஆனால் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மூன்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகவே கொடுத்துள்ளனர்.
குறிப்பாக டி ராமாநாயுடு தனக்கு சேர வேண்டிய ரூ 6 கோடியை செல்வராகவன் கொடுக்கும்வரை படத்தின் பிரிண்டுகளைக் கொடுக்கக் கூடாது லேபுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்.
எனவே இந்தக் கடன்களை செல்வராகவன் அடைத்தாலோ அல்லது அவர்களை சமாதானப்படுத்தினாலோ மட்டுமே இரண்டாம் உலகம் வெளியாகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications












