Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
1200 அரங்குகளில்... வெளியாகுமா இரண்டாம் உலகம்?
சென்னை: செல்வராகவனின் இரண்டாம் உலகம் படம் தமிழ், தெலுங்கில் 1200 தியேட்டர்களில் நாளை மறுநாள் ரிலீசாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் தரப்பட்டுள்ளதால், படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழில் இரண்டாம் உலகம் என்ற தலைப்பிலும், தெலுங்கில் வர்ணா என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகிறது.
இரு மொழிகளிலும் மொத்தம் 1200 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
ஆனால் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மூன்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகவே கொடுத்துள்ளனர்.
குறிப்பாக டி ராமாநாயுடு தனக்கு சேர வேண்டிய ரூ 6 கோடியை செல்வராகவன் கொடுக்கும்வரை படத்தின் பிரிண்டுகளைக் கொடுக்கக் கூடாது லேபுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்.
எனவே இந்தக் கடன்களை செல்வராகவன் அடைத்தாலோ அல்லது அவர்களை சமாதானப்படுத்தினாலோ மட்டுமே இரண்டாம் உலகம் வெளியாகும் என்கிறார்கள்.