Don't Miss!
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கம் இப்போ வாங்கலாமா..?
- News இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்.. எகிறும் டென்ஷன்
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
1200 அரங்குகளில்... வெளியாகுமா இரண்டாம் உலகம்?
சென்னை: செல்வராகவனின் இரண்டாம் உலகம் படம் தமிழ், தெலுங்கில் 1200 தியேட்டர்களில் நாளை மறுநாள் ரிலீசாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் தரப்பட்டுள்ளதால், படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழில் இரண்டாம் உலகம் என்ற தலைப்பிலும், தெலுங்கில் வர்ணா என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகிறது.
இரு மொழிகளிலும் மொத்தம் 1200 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
ஆனால் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என மூன்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகவே கொடுத்துள்ளனர்.
குறிப்பாக டி ராமாநாயுடு தனக்கு சேர வேண்டிய ரூ 6 கோடியை செல்வராகவன் கொடுக்கும்வரை படத்தின் பிரிண்டுகளைக் கொடுக்கக் கூடாது லேபுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்.
எனவே இந்தக் கடன்களை செல்வராகவன் அடைத்தாலோ அல்லது அவர்களை சமாதானப்படுத்தினாலோ மட்டுமே இரண்டாம் உலகம் வெளியாகும் என்கிறார்கள்.