Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தடைகள் கடந்து மார்ச் 20-ல் 'இரவும் பகலும் வரும்'!
இரு வாரங்களுக்கு முன்பே வருவதாக அறிவிக்கப்பட்ட இரவும் பகலும் வரும் படம், வரும் மார்ச் 20 ம் தேதி வெளியாகிறது.
எஸ். தணிகைவேல் வழங்கும், ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், "அங்காடி தெரு" மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "இரவும் பகலும் வரும்".
வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் பாலஸ்ரீராம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.
பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன்.
காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே "இரவும் பகலும் வரும்" படத்தின் கதை. தீனா இசையமைத்துள்ளார்.
இப்படம் திரையிடுவதை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் வென்ற படத் தயாரிப்பு தரப்பு, வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளது.