Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நட்பே துணை பட இயக்கத்தில் நடிகர் ஆதி தலையிட்டாரா? இயக்குனர் பார்த்திபன் விளக்கம்!
நடிகர் ஆதி தனது பணியில் தலையிட்டதாக வெளியான செய்தி தவறானது என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நட்பே துணை படத்தின் இயக்கத்தில் நடிகர் ஆதி தலையிட்டதாக வெளியான செய்தி குறித்து அப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
மீசைய முறுக்கு படத்தை அடுத்து ஹிப்பாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் நட்பே துணை. இப்படம் நாளை ரிலீசாகிறது.
இந்நிலையில் நட்பே துணை படத்தின் இயக்குனர் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
Exclusive உறியடி 2.. நிச்சயம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இயக்குனர் விஜய் குமார் நம்பிக்கை!
நட்பே துணையின் கதை
"நட்பே துணை ஹாக்கி விளையாட்டை பற்றிய படம். திறமை இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஹாக்கி வீரர்களுக்கு இப்படம் சமர்பனம். ஒரு மேட்ச்சில் தோற்றுவிட்டால், ஒரு வாரம் கூட சாப்பிடாமல் இருந்த விளையாட்டு வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் தாக்கத்தினால் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
பாண்டிச்சேரியில் நடக்கும் கதை
பாண்டிச்சேரி தான் கதை களம். அது எனது சொந்த ஊர் என்பதால், அதையே கதைக்களமாக பயன்படுத்தினோம். இந்த படத்தில் ஹாக்கியை தாண்டி, மீனவர்களின் வாழ்க்கையும் இருக்கும். பாண்டிச்சேரியை வேறொரு கோணத்தில் காட்டியிருக்கிறோம்.
ஆதிக்கு காயம்
இந்த படத்தில் நிறைய தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் சரிக்கு சமமாக நம்ம பசங்களும் விளையாடி இருக்கிறார்கள். ஆதிக்கு தோளில் அடிப்பட்டு ஒரு வாரம் அவதிப்பட்டார். படப்பிடிப்பின் போது நிறைய பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையெல்லாம் சமாளித்து தான் இப்படத்தை எடுத்துள்ளோம்.
கடுமையான உழைப்பு
மொத்த படக்குழுவுமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். கேமரா மேன் அரவிந்த் உள்பட, அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். பாண்டியராஜன், கரு.பழனியப்பன் என அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர். நிறைய இளைஞர்கள் இந்த படத்தில் வேலை செய்துள்ளனர்.
ஆதி தலையிட்டாரா?
நடிகர் ஆதி எனது வேலையில் தலையிடுவதாக வெளியான செய்தி தவறானது. ஒரு திரைப்படம் என்பது அனைவருடைய கூட்டு முயற்சியில் தான் உருவாகிறது. இங்கு எல்லோருடைய ஆலோசனைகளும் தேவை. அப்படி ஏதாவது ஆலோசனை தரும்போது, மற்றவர்கள் அதனை தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டிருக்கலாம்", என இயக்குனர் பார்த்திபன் கூறினார்.