Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாட்ஸ்ஆப் பரபர... தற்கொலை செய்து கொண்டாரா நடிகர் பப்லு?
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு தற்கொலை செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் பரவிய வதந்தியால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். தற்போது ‘வாணி ராணி' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நேற்றும் இன்றும் வாட்ஸ்ஆப்பில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.
அதில், "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்," என்று பேசியிருந்தார்.
இது பரபரப்பைக் கிளப்பியது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாணி ராணியைத் தயாரிக்கும் ராடான் நிறுவனமும் அவரைப் பற்றி தகவல் ஏதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.
போலீஸ் தரப்பிலும் இந்த ஆடியோ உண்மைதானா? என்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஆடியோவில் இடம்பெற்றது ஒரு குறும் படத்தில் அவர் பேசிய வசனம் என்று இப்போது தகவல் கிடைத்துள்ளது. பப்லு நலமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.