பார்ட்டியில் இருந்து அழுதபடியே வந்த நடிகர் அர்ஜுனின் மனைவி: காரணம் ரித்திக்கின் மாஜி மனைவி?
மும்பை: கலை இயக்குனர் அபிஷேக் கபூரின் பிறந்தநாள் விழா பார்ட்டியில் இருந்து அர்ஜுன் ராம்பாலின் மனைவி மெஹர் ஜெசியா அழுதபடியே வெளியே வந்ததற்கு ரித்திக்கின் முன்னாள் மனைவி சூசன் காரணமா என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை விட்டு அவரது மனைவி சூசன் பிரிந்து சென்றுவிட்டார். அவர் ரித்திக்கை பிரிய அவருக்கும், நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது தான் காரணம் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது.
இந்நிலையில் பாலிவுட் கலை இயக்குனர் அபிஷேக் கபூரின் பிறந்தநாள் விழா பார்ட்டிக்கு அர்ஜுன், அவரது மனைவி மெஹர் ஜெசியா, சூசன் கான் ஆகியோர் வந்துள்ளனர்.

மெஹர்
கணவருடன் ஜோடியாக இரவு 12.15 மணிக்கு பார்ட்டிக்கு வந்த மெஹர் 2.30 மணிக்கு தனியாக அழுது கொண்டே அங்கிருந்து சென்றார்.

அர்ஜுன்
மெஹர் கிளம்பிச் சென்ற ஒரு மணிநேரம் கழித்து பார்ட்டியில் இருந்து கிளம்பினார் அர்ஜுன். அவருக்கு பின்னாலேயே சூசனும் சென்றார்.

பத்திரிக்கையாளர்கள்
அர்ஜுன் பத்திரிக்கையாளர்களை தவிர்த்துவிட்டு சென்றார். ஆனால் சூசனோ வழக்கு போடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார்.

சூசன்
மெஹர் பார்ட்டியில் இருந்து அழுது கொண்டே சென்றதற்கு சூசன் தான் காரணமா என்று பேசப்படுகிறது. ரித்திக்கை பிரிந்த சூசன் அர்ஜுன், மெஹருடன் சேர்ந்து தான் பார்ட்டிகள், ஹோட்டல்களுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











