Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யை அந்த இயக்குனர்தான் மீண்டும் இயக்கப் போறாராமே?
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' படத்தில், இப்போது நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தளபதி 65 படம் பற்றி புதிய தகவல்கள் இணையத்தில் வைரலாகின.
என்ன சர்ப்ரைஸ்.. ஆரத்யாவுக்கு தம்பி பாப்பா வரபோறாங்களா? அபிஷேக் டிவிட்டால் கன்ஃபியூஸான நெட்டிசன்ஸ்!
சன் பிக்சர்ஸ்
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகின. அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக, சினிமா மானேஜரான ஜெகதீஷ் அனுப்பிய வாட்ஸப் மெசேஜையும் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், தான் அனுப்பியதாக சொல்லப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜை மறுத்திருந்தார் ஜெகதீஷ்.
ரூ.100 கோடி சம்பளம்
இந்நிலையில், தளபதி 65 படத்துக்காக, நடிகர் விஜய்-க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் அதைக் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு நிலவியது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சம்பள விஷயத்தில் விஜய் முந்தியுள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது உறுதிப் படுத்தப்படவில்லை.
மீண்டும் அட்லீ
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை, அட்லீயே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருக்கிறார். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என்பதால், அவரே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஷாரூக்கான் படம்
இதற்கிடையே அவர் பிரபல இந்தி ஹீரோ ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி ஷாரூக் கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் படம் தள்ளிப்போனால் விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என்றும் கோலிவுட்டில் தகவல் உலவுகிறது.