Don't Miss!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- News ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பர்ஃபி கதை சுட்டதா, சுடாததா?
அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடித்த வெற்றிப் படம் பர்ஃபி. இந்த படத்தில் ரன்பீர் காது கோளாத வாய் பேசமுடியாதவராகவும், பிரியங்கா ஆட்டிஸம் பாதித்தவராகவும் நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் பல காட்சிகள் பல இடங்களில் இருந்து சுடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரன்பீர் கபூர் செய்யும் சில காமெடிகள் சார்லி சாப்ளின் படங்களில் இருந்தும், இலியானா வரும் ஒரு காட்சியும், பிரியங்காவும், ரன்பீரும் ஒரே படுக்கையில் இறந்து கிடக்கும் காட்சியும் ஹாலிவுட் படமான தி நோட்புக்கில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தனை காட்சிகளை பல்வேறு இடங்களில் இருந்து சுட்ட படத்தையா இந்தியா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏழாம் அறிவு மற்றும் வழக்கு எண் உள்பட மொத்தம் 19 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதியில் பர்ஃபி திரைப்படம் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.