Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் உதவியது உதயநிதி இல்லையா? தயாநிதி அழகிரி தானா? வைரலாகும் ட்வீட்!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்த படம் ரிலீஸாகும் என்கிற நம்பிக்கை நேற்று மாலை வரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கே இல்லை.
பிக் பாஸ் 5 : இதுதாய்யா என்ட்ரி... மாஸா வந்த தளபதியின் நெருங்கிய நண்பன் !
உதயநிதி ஸ்டாலின் தான் முன் வந்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் என தகவல்கள் பரவிய நிலையில், தற்போது தயாநிதி அழகிரி தான் மாநாடு திரைப்படம் வெளியாக உதவி உள்ளார் என கூறப்படுகிறது.
ரிலீசானது மாநாடு
மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் கடைசி நேரத்தில் தள்ளிப் போனது. நவம்பர் 25ம் தேதியான இன்று படம் வரும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்கள் புக் ஆன நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை படம் வெளியாகுமா? ஆகாதா என பல போராட்டங்கள் நடந்தன. கடைசியில் படம் இன்று வெளியானது.
ஸ்பெஷல் ஷோ ரத்து
சிம்பு படம் என்பதால் அதிகாலை 5 மணி காட்சியை வெளியிட பல திரையரங்குகள் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் KDM பிரச்சனை ஏற்பட்டு ஸ்பெஷல் ஷோ ரத்து செய்யப்பட்டது. அந்த பிரச்சனையையும் படக்குழு சரி செய்து காலை 8 மணிக்கு முதல் காட்சியை வெளியிட்டது.
பிளாக்பஸ்டர்
மாநாடு திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் என பாசிட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அஜித், விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
உதயநிதி உதவினாரா
மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் படம் வெளியீட்டில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கலைஞர் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்று படத்தை ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது நன்றி ட்வீட்களை தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை.
தயாநிதி அழகிரி உதவி
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பரான தயாநிதி அழகிரி தான் கடைசி நேரத்தில் படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளியாக உதவினார் என யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
தயாநிதி அழகிரி பதில்
அந்த ட்வீட்டுக்கு கீழ் பதில் அளித்த தயாநிதி அழகிரி "சத்தியமா இல்ல ப்ரோ.. உங்களை போல நானும் படம் ரிலீசாக வேண்டும் என வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக படம் தடைகளை தாண்டி வெளியாகி விட்டது சந்தோஷம் என ட்வீட் போட்டுள்ளார். மாநாடு படத்திற்கு உண்மையாகவே என்ன பிரச்சனை? யார் அழுத்தம் கொடுத்தார்? யார் படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் என்பது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.