Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அடுத்தடுத்து பிரச்சனை: அட்லிக்கு நேரம் சரியில்லையோ?
சென்னை: தளபதி 63 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அடுத்தடுத்து பிரச்சனையாக உள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து இயக்குநர் அட்லி விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் அந்த கதை தன்னுடையது என்று குறும்பட இயக்குநர் செல்வா புகார் தெரிவித்தார்.
புகார் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
லீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்: அதிர்ச்சியில் படக்குழு
அட்லி
கதை திருட்டு விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அட்லியின் மேனேஜர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார் செல்வா. கதை திருட்டு பிரச்சனை குறித்து அட்லி வாய் திறக்கவில்லை. அவர் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
புகார்
தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் அட்லி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக துணை நடிகை கிருஷ்ண தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அட்லியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அது பொய் புகார் என்று தெரிவித்துள்ளார் அட்லி.
படுகாயம்
ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தளபதி 63 படப்பிடிப்பு நடந்தபோது ஃபோகஸ் விளக்கு கீழே விழுந்து எலக்ட்ரீஷியன் செல்வராஜ் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அமைதி
தளபதி 63 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அட்லி அமைதியாக நம்பிக்கையுடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். அட்லிக்கு நேரம் சரியில்லையோ என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.