Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னடா நடக்குது இங்க...பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தே ட்வீட் போடுறாரா அபிஷேக்?
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கப்பட்டு 6 நாட்கள் முடிவடைந்து விட்டது. இன்றைக்கு கமல் வரும் எபிசோடும் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சி துவங்கியது முதல் போட்டியாளர்களில் இதுவரை அதிகம் ட்ரோல் செய்யப்படும் போட்டியாளர் என்றால் அது யூட்யூபர் அபிஷேக் ராஜா தான.
ரெண்டு கையிலும் ரத்தக்கறையுடன் சங்கு.. யானை படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய உடனேயே, பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கிண்டல் செய்து அபிஷேக் ராஜா பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி, வறுத்தெடுத்தனர். அதோடு கமலிடம், இவரை கொஞ்சம் கவனிங்க என்று பல விதங்களில் புகார் செய்தும், கேள்வி எழுப்பியும் வந்தனர்.
நீ எதுக்கு போன
உங்கள கேமிரா வச்சு படம் எடுக்குறது ஊருக்கே தெரியும். இருந்தும் தமிழ்நாடு சிஎம் ஆகுறதுக்காக நீங்க பண்றது தாங்க முடியலடா. கேட்டா பிக்பாஸ்னு சொல்றீங்க என்றார் அபிஷேக். இந்த வீடியோவை பார்த்து விட்டு பலரும், எல்லாம் தெரிஞ்சும் நீ எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன என மிக கடுமையாக விமர்சித்து, கேள்வி எழுப்பினர்.
ரெவ்யூ கொடுத்த அபிஷேக்
இதைத் தொடர்ந்து அபிஷேக்கின் முன்னாள் மனைவியும் அவர் பற்றி கூறியது மேலும் பரபரப்பை கூட்டியது. இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அபிஷேக் ரெவ்யூ கொடுத்தது, அவரை கிண்டல் செய்ய நெட்டிசன்களுக்கு வசதியாகி விட்டது. இந்நிலையில் புதிய சிக்கல் ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளார் அபிஷேக்.
தினமும் ட்வீட் போடும் அபிஷேக்
பிரியங்கா, பாவனி, நதியா போன்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரின் சோஷியல் மீடியா பக்கங்கள் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறது. அவர்களுக்கு பதில் அவர்களின் அட்மின் பதிவிடுவதாக கூறி, இவர்களின் ஃபோட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஆனால் அபிஷேக்கின் ட்விட்டர் பக்கத்தில் தினமும் பல ட்வீட்கள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
மொபைல் பயன்படுத்துறாரா
டாக்டர் பட ரிலீஸ், வலிமை எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ், அண்ணாத்த செகண்ட் சிங்கிள் வெளியீடு என அனைத்து சினிமா அப்டேட்களையும் பதிவிட்டு ட்வீட் செய்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து அபிஷேக் விடாமல் போஸ்ட் செய்து வருகிறாரே எப்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி உண்டா என்றெல்லாம் பல விதங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.
க்ரைம் ரேட் அதிகமாகுதே
ஆனால் இது அட்மின் செய்யும் வேலை. அபிஷேக்கை விட அட்மின் நல்லா வேலை செய்றாரே என பலர் கிண்டல் செய்துள்ளனர். மேலும் சிலர் அபிஷேக், பிக்பாஸ் வீட்டிற்குள் தெரியாமல் போன் பயன்படுத்துகிறார். அவரை பிக்பாஸும் கமலும் கவனிக்க வேண்டும். அபிஷேக்கின் க்ரைம் ரேட் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே என கேள்விகளை அடுக்கி வருகிறார்கள்.
இது எப்படி அவருக்கு தெரியும்
அதே சமயம் புதிய சந்தேகம் ஒன்றையும் நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர். அபிஷேக்கின் ட்விட்டர் பக்கத்தில் வருவதெல்லாம் அவரின் அட்மின் பதிவிடுகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், வெளியில் நடக்கும் விஷயங்கள் அபிஷேக்கிற்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில், டீ கப்பை சுத்தம் செய்யும் இடத்தில் வைத்தால் மட்டுமே சுத்தம் செய்வோம் என நமீதா கோபமாக பேசினார். பிரியங்காவும் அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.
வாயால் சிக்கிய அபிஷேக்
அப்போது கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அபிஷேக், சிஎம் ஆக ட்ரை பண்ணுறன்னு நான் ஏன் சொன்னேன்னு இப்போ புரியுதா என கேட்கிறார். அதற்கு முதல் நாள் தான், அபிஷேக் பேசிய பழைய வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டது. வீட்டிற்குள் இருக்கும் அபிஷேக்கிற்கு இது எப்படி தெரியும், எப்படி இதை குறிப்பிட்டு அவர் பேசி உள்ளார் என்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.