Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமலுடன் பேச தமிழக அரசு தயாராக இல்லை?!
அதற்கு முன், அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.
ஆனால் கமல், நேற்று வரை இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச தயாராக இருப்பதாக அறிவித்தாரே தவிர, அரசை அணுகப் போவதாகக் கூறவே இல்லை. அதே போல அரசும் கூட அவருடன் பேச விரும்பாத சூழலே உள்ளது.
ஆனால் இன்று அவர் அரசை அணுகி, விஸ்வரூபத்தை சுமூகமாக வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன.
இதுகுறித்து கமல் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "காட்சிகளை வெட்டிவிட்டு இந்தப் படத்தை வெளியிடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. மேலும் அரசை அணுகும் திட்டம் எதுவும் கமலிடம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்," என்றனர்.
இதற்கிடையில் அரசும் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிடவோ, முடிவிலிருந்து பின்வாங்கவோ தயாராக இல்லை என்று தெரிகிறது. துப்பாக்கியில் காட்சிகளை வெட்டியது போல இந்தப் படத்திலும் வெட்டிவிட்டுப் போவதுதானே ... ஏன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறார் கமல்? என்றுதான் திருப்பிக் கேட்டுள்ளார்கள் அரசுத் தரப்பில் பேசியவர்கள்.
இதற்கிடையில் இன்றைய நீதிமன்ற விசாரணையில் கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படம் வெளி வருவதற்காக ஏக முறைகேடுகளைச் செய்துள்ளார் கமல் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளதால், கமலுக்கு உச்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு வெகு விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள். பார்க்கலாம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?