Don't Miss!
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா?
பிரபல தமிழ் - மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார் முன்னணி நடிகர் திலீப். அவர் மனைவி காவ்யா மாதவனுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளான் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில்.
கேரளாவில் ஓடும் காரில் நடிகையைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகர் திலீப்பும் கைதானார்.
பல்சர் சுனிலின் வாக்குமூலத்தில் நடிகை கடத்தல் வழக்கில் 'மேடம்' ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார். அவர் திலீப்பின் 2-வது மனைவியான நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக பல்சர் சுனில் ஆஜர்படுத்தப்பட்டார். வெளியே வந்த பல்சர் சுனில், நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பில்லை என கூறிவிட்டார்.
இதனால் இந்த கடத்தலில் வேறு முன்னணி நடிகைக்கு தொடர்பிருக்குமோ என விசாரித்து வருகின்றனர்.