Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிம்புவுக்கு வில்லனா, இல்லையா? நாளை முடிவு செய்கிறார் சுதீப்
சென்னை: சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப்பிடம் நாளை கதை சொல்ல இருக்கிறார், இயக்குனர் வெங்கட் பிரபு.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர்.
அடுத்த மாதம் ஷூட்டிங்
இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க முன் வந்தார் சுரேஷ் காமாட்சி. அடுத்த மாதத்தில் இருந்து மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக, தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
கல்யாணி பிரியதர்ஷன்
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருப்பதால் பவர்புல் வில்லனை தேடி வந்தனர்.
கன்னட ஹீரோ சுதீப்
இந்நிலையில், சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப்பின் வில்லன் கேரக்டர் பேசப்பட்டதால் அவரை வில்லனாக்க முடிவு செய்தனர். கன்னட ஹீரோ சுதீப், தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.
நாளை கதை சொல்கிறார்
இந்நிலையில், முதலில் கதை சொல்லுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்தார் சுதீப். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, இன்றிரவு பெங்களூரு செல்கிறார். நடிகர் சுதீப்பிடம் நாளை கதை சொல்கிறார். கதையை கேட்டபின் பிடித்திருந்தால் சுதீப் நடிப்பார் என்று கூறப்படுகிறது.