Don't Miss!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருநாள் படத்தின் கதைதான் கிடாரியா? இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்?
ஜீவா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருநாள். வில்லன் சரத் லோகியாலாவிடம் அடியாளாக இருப்பார் ஜீவா. ஒரு கட்டத்தில் சரத்தின் செயல்கள் பிடிக்காமல் போக அவருக்கு எதிராகவே களம் இறங்குவார். இறுதியில் சரத்தை போட்டு தள்ளுவதாக படம் முடியும்.
அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் கிடாரி படமும் இதே கதைதான் என்கிறார்கள். ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கும் அந்த சந்தேகம் ஏற்படுகிறது. வேல ராமமூர்த்தியிடம் வேலை பார்ப்பவராக சசிகுமார் வருகிறார். ஒரு கட்டத்தில் வேல ராமமூர்த்தியையே எதிர்க்கும் சூழ்நிலை வருகிறது.
இறுதியில் சசியின் அப்பாவாக நெப்போலியன் எண்ட்ரி ஆகிறார்.
இந்த ஒன்லைன் காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படங்களில் வந்திருக்கிறது என்றாலும் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரே லைனில் வருவதால் எப்படி இந்த குழப்பம் வந்திருக்கும் என கிடாரி படக்குழு தலையை பிய்த்துக்கொள்கிறதாம்.
என்ன பெரிய குழப்பம்.. கதைப் பஞ்சத்துல அடிப்பட்டுப் போய் ஒரே கதையை மாத்தி மாத்தி எடுக்கிறது என்ன புதுசா?