Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆபாசமாக படம் எடுத்து டாப்ஸியை பிளாக்மெயில் செய்கிறார் மகத்?
ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸிக்கும் மங்காத்தாவில் நடித்த மகத்துக்கும் ஆரம்பத்தில் காதல் என்று கூறப்பட்டது.
ஆனால் மோகன் பாபு மகன்களுடன் டாப்ஸி நெருக்கம் காட்டினார். குறிப்பாக மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜூடன் அவர் தனிக்குடித்தனம் நடத்துவதாகக் கூறப்பட்டது.
சென்னைக்கு வரும்போது மகத்தும், ஹைதராபாதில் மோகன்பாபு மகனும் அவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் மகத்தை ஒதுக்க ஆரம்பித்துவிட்டாராம்.
இதற்கு காரணம் மஞ்சு மனோஜ்தான் என்று கோபப்பட்டுள்ளார் மகத்.
இந்த நிலையில் மகத்தும், மனோஜும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர்.
மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார்.
மகத் புகார் தந்ததால் வழக்குப் பதிவு செய்து மனோஜிடம் விசாரணை நடத்த போலீசார் தயாரானார்கள். ஆனால் மனோஜ் மலேசியா தப்பி விட்டார்.
இதற்கிடையில் விசாரணை தொடரவேண்டாம் என்று முக்கியஸ்தர்களிடம் இருந்து போலீசாருக்கு நெருக்கடிகளும் வந்தன. இருதரப்பிலும் சமரச முயற்சிகளும் நடந்தன. ஆனால் மனோஜ் தன்னை கைது செய்யலாம் என்று கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் பற்றி விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போலீசாருக்கு ஏற்பட்டது. ரகசிய விசாரணையில் அவர்கள் இறங்கினர்.
அடிதடி நடந்ததை நேரில் பார்த்தவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். மனோஜ், மகத் நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டது. மனோஜ் தரப்பில் டாப்சியை மகத் மிரட்டியதால் இந்த அடிதடி நடந்ததென கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாப்சியும் மகத்தும் மிக நெருக்கமாக இருந்த போது, இருவரும் அந்தரங்கமாக இருந்ததை மகத் ரகசியமாக வீடியோ படம் எடுத்து வைத்திருந்ததாகவும், தற்போது நட்பை முறித்துக் கொண்டதால், டாப்சி மீது ஆத்திரமாகி அந்த வீடியோ படங்களைக் காட்டி அவரை மிரட்டியதாக மனோஜ் நண்பர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
மகத்திடம் இதுபற்றி மனோஜ் கோபத்துடன் கேட்டபோதுதான் வாய்த்தகராறு முற்றி அடிதடி வரை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து புகார் கொடுத்த மகத் மீதே கடுமையான வழக்கு பாயும் நிலை உருவாகியுள்ளது.
'கட்டகடேசில.. 'மங்காத்தா' வேலையத்தான் செஞ்சீங்களா மகத்? இல்ல போலீஸை வச்சி மனோஜ் அன்ட் கோ இந்த கேமை விளையாடறாங்களா?', என்ற கமெண்ட் கிளம்பியுள்ளது கோலிவுட்டில்!