Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எந்திரன் வசூலை முறியடித்துவிட்டதா மெர்சல்?
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணக்கில் இந்த வருடம் முதல் இடத்தை மெர்சல் படம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் உச்ச வசூல் மெர்சலுக்குத்தான்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் 170 கோடி ரூபாய் வசூலித்தது, தமிழகத்தில். அந்த சாதனையை அடுத்து வந்த எந்த படமும் முறியடிக்க முடியவில்லை.
எந்திரன் குறுகிய நாட்களில் இந்த வசூலை செய்தது, அப்போது வியாபார வட்டாரங்களில் மிகப் பெரும் சாதனையாக கூறப்பட்டது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் அதே போல் முதல் வாரம் எந்திரன் போன்று பெரும் வசூலைப் பெற்றது. போகிற போக்கை வைத்து கணித்தபோது எந்திரன் வசூலை முறியடித்து முதல் இடத்துக்கு மெர்சல் முன்னேறும் எனக் கூறப்பட்டது.
தமிழகத்தில் மெர்சல் திரையிடப்பட்ட பெரும்பான்மையான தியேட்டர்களில் இன்று முதல் புதிய படங்கள் திரையிடப்படுகின்றன. எனவே பெரும் வசூலை இனி வரும் நாட்களில் மெர்சல் படம் செய்ய வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் இப்படம் 29 நாட்களில் வசூலித்த மொத்த தொகை என்னவாக இருக்கும் என்பதை சம்பந்தபட்ட தயாரிப்பாளர், மற்றும் விநியோகஸ்தர்கள் வெளிப்படையாக பொது வெளியில் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை. தனிப்பட்ட முறையில் பேசுகிற போது, "முதல் இரண்டு வாரம் மெர்சல் கல்லா கட்டியது. அதன் பின் சராசரி வசூல்தான். 29 நாட்களில் 150 கோடி மொத்த வசூல் என்பதே உண்மை நிலை. எந்திரன் தயாரிப்பாளருக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது. அப்போது கேளிக்கை வரி மட்டும் தான் இருந்தது. மெர்சல் 150 கோடி வசூல் செய்திருந்தாலும் தயாரிப்பாளருக்கான வருவாய் எந்திரன் போன்று நிறைவாக இல்லாமல் போனதற்கு காரணம் கேளிக்கை வரி மற்றும் ஜிஸ்டிதான். தமிழ் நாட்டின் மத்திய விநியோக பகுதியில் 14 கோடி மொத்த வசூல். அதில் தயாரிப்பாளருக்கு 8 கோடி ரூபாய் கிடைக்கும். இதுவே எந்திரன் படத்திற்கு 9.25 கோடி வரை கிடைத்தது. காரணம் அப்போது ஜிஎஸ்டி வரி இல்லை.
மெர்சல் படம் தியேட்டர், விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்த படம். தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்காத படம் என்பதே தற்போதைய நிலைமை. எந்திரன் வசூலை மெர்சல் எட்டிப் புடிக்க முடியவில்லை என்றாலும் விஜய் படங்களின் வசூல் கணக்கில் 150 கோடி என்பது அசுர சாதனைதான். இதனை முறியடிக்க எதிர்வரும் படங்களால் முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.