நயன்தாராதான் மீஞ்சூர் கோபி படத்தின் தயாரிப்பாளரா?
கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மீஞ்சூர் கோபியை நினைவிருக்கிறதா.... இவர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படத்தின் தயாரிப்பாளரே நயன்தான் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
நயன்தாராவுக்கு வெகு காலமாகவே தயாரிப்பாளர் ஆகும் ஆசை இருந்து வருகிறது. காதலர் விக்னேஷ் சிவனுக்காக அஜித்திடமே கால்ஷீட் கேட்டு அவர் மறுத்ததாக ஒரு செய்தி வந்தது.

இப்போது நடித்து வரும் மீஞ்சூர் கோபி படத்தில் தயாரிப்பாளர் என்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பெயர் வருகிறது. நயன்தாரா அப்படி புது கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுப்பவர் கிடையாது. எனவே நயன்தாராதான் அந்த படத்தின் மறைமுக தயாரிப்பாளர் என்கிறார்கள்.
இன்னும் ஒரு வருடத்துக்கு நடிப்பு ... அதன்பின் தயாரிப்பாளர் மட்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் நயன்.
Comments


Click it and Unblock the Notifications