மருத்துவமனையில் செல்வராகவன், என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போகிறதா?: உண்மை என்ன?
Recommended Video

சென்னை:செல்வராகவனுக்கு அறுவை சிகிச்சை என்றும், இதனால் என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செல்வராகவன் அப்பென்டிக்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் என்.ஜி.கே. தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இதை பார்த்த செல்வராகவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நண்பர்களே. சிம்பிளான மெடிக்கல் ப்ரொசீஜர் தான். நான் நலமாக உள்ளேன். வேலையை துவங்கிவிட்டேன். என்.ஜி.கே. படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் துவங்கும். உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. தீபாவளி டா என்று மகிழ்ச்சியுடன் ட்வீட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











