'பவர் பாண்டி'யின் கதை ஹாலிவுட்டில் இருந்து உருவியதா?: படக்குழு விளக்கம்
சென்னை: தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை ஹாலிவுட்டில் இருந்து உருவியதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக நடிப்பு, தயாரிப்பு, பாடுவது, பாடல் எழுதுவதோடு நின்றிருந்த தனுஷ் இந்த ஆண்டு இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். அதுவும் சென்ட்டிமென்டாக தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் ஹீரோவான ராஜ் கிரணையே தனது படத்தின் ஹீரோவாக்கியுள்ளார்.

இந்நிலையில் ஜான் டிரவோல்டா நடித்த ஒயில்டு ஹாக்ஸ் ஹாலிவுட் படக் கதையை சுட்டு தான் தனுஷ் பவர் பாண்டியை இயக்குவதாக ஒரு செய்தி வெளியானது.
இது குறித்து படக்குழு கூறுகையில்,
இது ஹாலிவுட் படத்தின் கதை இல்லைங்க. முழுக்க முழுக்க எங்களின் ஒரிஜினல் கதை. படங்களில் வேலை செய்யும் ஸ்டண்ட் பார்ட்டிகளை பற்றிய கதை என்றனர்.


Click it and Unblock the Notifications











