Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாம் என்ன பண்ணுகிறோம் என்பது தெரிந்துதான் செய்கிறார்களா இந்தத் தயாரிப்பாளர்கள்!?
இயக்குநர் பாக்யராஜிடம் ஜி.எம்.குமார் (அறுவடைநாள் படத்தின் இயக்குநர்) உதவியாளராக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது. கதை விவாதம் நடக்கும் போது உதவி இயக்குநர்களிடம் சமீபத்தில் வெளியான படங்கள் பற்றிக் கேட்பாராம் ஜி.எம்.குமார். "படம் பார்க்கல சார்" என்று யாரவது சொன்னால் கோபமாகி திட்ட ஆரம்பித்துவிடுவாராம்.
"படம் நல்லா இருக்கோ இல்லையோ படத்தைப் பாத்திரனும். நாம ஒரு கதை பேசிக்கிட்டிருக்கும் போது வெளிவந்த படத்திலுள்ள காட்சி நம்ம கதையில் வராமப் பார்துக்கணும்னா அந்தப் படம் பார்த்தால்தானே முடியும்! போய் படம் பார்த்திட்டு வா," என்று காசு கொடுத்து உதவி இயக்குனர்களைப் படம் பார்க்க அனுப்புவாராம் ஜி.எம்.குமார்.
ஒரு காட்சிக்கே கவனமாகப் பார்த்த காலம் அது. இப்போ ஒரு முழு படமே சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் சாயலில் வரவிருக்கிறது. படத்திற்கு பெயர் - 'சீசர்' ஆக்சன் கிங் அர்ஜுனின் அக்கா மகன் 'சிரஞ்சீவி சர்ஜா' இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தவிர, பிரகாஷ்ராஜ், கன்னட நடிகர் ரவிச்சந்திரன் என முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் வினய் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதை?
கடன் வாங்கி கார் வாங்கி விட்டு கடனைக் கட்ட முடியாமல் ஏமாற்றும் நபர்களின் கார்களை அவர்களுக்குத் தெரியாமலேயே கைப்பற்றித் தூக்கும் கார் சீசர் ஒருவன் பற்றிய கதை இது. பொதுவாக கார் லோன் வாங்கிவிட்டு ஒழுங்காக தவணை கட்டாத ஆட்களின் கார்களை, அவர்களுக்கே தெரியாமல் சீஸ் செய்ய பல நடைமுறைகள், யுக்திகள், தொழில் நுணுக்கங்கள் உள்ளன. அவற்றை விரிவாகப் படத்தில் காட்டியுள்ளார்களாம். இதன் பின்னணியில் உள்ள பைனான்சியர்கள், தாதாக்கள், ரவுடிகள் பற்றிய நிழல் உலகத்தையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'பர்மா' படமும் இந்தக் கதைதான். ஏன்... விக்ரம் நடித்த ஸ்கெட்ச் கதையின் சில காட்சிகளும் இப்படித்தானே இருக்கும்... அது எப்படி 'சீசர்' படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் போனது!
இயக்குநர் ஜி.எம்.குமார் கதையை இப்போது எதற்காக சொன்னோம் என்பது புரிந்திருக்குமே!
-வீகேஎஸ்