Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா ராம் ரஹீம் சிங்: உண்மை என்ன?
சன்டிகர்: காமக்கொடுரன் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பது தெரிய வந்துள்ளது.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தலித் தலைவர் ஸ்வதேஷ் கிரத் ராம் ரஹீம் சிங் பற்றி கூறியதாவது,
தண்டனை
சிறையில் அடைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் தனக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும் மண்டியிட்டு என்னை தூக்கிலிடுங்கள், நான் இனி வாழ விரும்பவில்லை என்று கதறினார்.
தூக்கம்
சிறையில் அடைத்த நாள் அன்று இரவு ராம் ரஹீம் சிங் தூங்கவே இல்லை. கடவுளே நான் என்ன தவறு செய்தேன் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
விஐபி
சிறையில் ராம் ரஹீம் சிங்கை பிற கைதிகளை போன்றே நடத்துகிறார்கள். அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. சக கைதிகள் அவர் மீது கோபத்தில் இருப்பதால் அவரை தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர்.
கோபம்
ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இது குறித்து அறிந்த கைதிகள் ராம் ரஹீம் சிங் மீது கோபம் அடைந்தனர். அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார் கிரத்.