Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவராக சீன் போடுகிறாரா வாரிசு நடிகை?
மும்பை
மும்பை: பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா படப்பிடிப்பு தளத்தில் ஓவர் சீன் போடுவதாக வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் அர்ஜுன் என். கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். கேதர்நாத் படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் சாரா ஓவர் சீன் போடுவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ஜுன் என். கபூர் கூறியிருப்பதாவது,
சாரா
சாரா ஓவர் சீன் போடும் ஆள் இல்லை. அவரை பற்றி யாரோ தவறான தகவலை பரப்பியுள்ளனர். சாரா 100 சதவீத ஈடுபாட்டுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் நாள்
படப்பிடிப்பு துவங்கிய முதல் நாள், முதல் நாள் போன்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சாராவும், சுஷாந்த்தும் ஒத்திகை எடுத்துள்ளனர். சாரா காட்சிகளை உடனே புரிந்து கொண்டு நடிக்கிறார்.
ஒரே டேக்
சாரா ஒரே டேக்கில் காட்சிகளில் நடிக்கிறார். முதல் படத்தில் நடித்தாலும் சாரா கேமரா முன்பு சவுகரியமாக நடிக்கிறார். அவர் கூட்டத்தை பார்த்து பயப்படுவது இல்லை.
திறமை
சாரா அலி கான் திறமையானவர். சினிமா துறையை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதே சமயம் கடினமாக உழைக்க தயங்காதவர். ஏற்கனவே அவர் படக்குழுவின் செல்லப் பிள்ளையாகிவிட்டார் என்றார் அர்ஜுன்.