Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சத்யராஜால் என் சினிமா வாழ்க்கை சீரழிந்ததா? உண்மையைப் போட்டுடைத்த நடிகை விசித்ரா!
தனது சினிமா வாழ்க்கை சீரழிய நடிகர் சத்யராஜ் காரணமில்லை என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கை சீரழிய நடிகர் சத்யராஜ் தான் காரணமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை விசித்ரா.
90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. கடந்த 2002ம் ஆண்டு இரவு பாடகன் படத்தில் கடைசியாக நடித்தார். திருமணத்திற்குப் பின் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தவர், கணவரின் ஹோட்டல் தொழிலைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இதற்காக தனியே ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளார்.
குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினாரா ஜீவா பட நடிகை?: மேனேஜர் விளக்கம்
#Sathyaraj sir always believed in my performance.He had given a good character in his first directorial venture@villadi villain movie.stereo type tamil cinema at that time stopped me from doing good roles.@Sibi_Sathyaraj. https://t.co/uLz3orDWUa
— Vichitra (@Vichitr64059385) May 11, 2019
நடிகை விசித்ரா தற்போது டிவிட்டரில் இணைந்து, தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அரவது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், "தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு" என கமெண்ட் செய்தார்.
இதற்கு பதிலளித்த விசித்ரா, "எனது திறமை மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லனில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை அளித்தார். அந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு வந்ததால், என்னால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது", என தெரிவித்துள்ளார்.